Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37 அடியாக உயர்வு

ADDED : மே 31, 2025 04:53 AM


Google News
கோவை; கேரள வனப்பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கன மழை தொடர்வதால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்கிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 65 மி.மீ., அடிவாரத்தில் 46 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதனால், 37.10 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 7.58 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு:


கோவை வேளாண் பல்கலை - 7.60 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம் - 3, மேட்டுப்பாளையம் - 2, பில்லுார் அணை - 7, கோவை தெற்கு - 11, சூலுார் - 2.40, வாரப்பட்டி - 5, தொண்டாமுத்துார் - 12.40, மதுக்கரை - 6.50, போத்தனுார் - 11.60, பொள்ளாச்சி - 31.40, மாக்கினாம்பட்டி - 37, கிணத்துக்கடவு - 10, ஆனைமலை - 19, ஆழியாறு - 9.80, சின்கோனா - 103, சின்னக்கல்லார் - 126, வால்பாறை - 114 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us