Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவிகளுக்கு ரத்தசோகை கண்டறிய ஆய்வு பள்ளிகள் தோறும் தீவிரம்

மாணவிகளுக்கு ரத்தசோகை கண்டறிய ஆய்வு பள்ளிகள் தோறும் தீவிரம்

மாணவிகளுக்கு ரத்தசோகை கண்டறிய ஆய்வு பள்ளிகள் தோறும் தீவிரம்

மாணவிகளுக்கு ரத்தசோகை கண்டறிய ஆய்வு பள்ளிகள் தோறும் தீவிரம்

ADDED : அக் 21, 2025 10:31 PM


Google News
பொள்ளாச்சி: மத்திய அரசின் தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ், பள்ளிகள்தோறும், வளரிளம் மாணவியர் இடையே ரத்தசோகை கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மனநலம் காக்கும் விதமாக, மத்திய அரசின் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் (ஆர்.பி.எஸ்.கே.,) செயல்படுத்தப்படுகிறது.

அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு, சுகாதார மருத்துவக்குழுவினர், நேரடியாகச்சென்று அனைத்து மாணவ, மாணவியரையும் பரிசோதனை செய்து, பிறவி குறைபாடு குறித்த முழு விபரங்களும், குறிப்பேடு அட்டையில் பதிவு செய்யப்படுகிறது.

தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, பள்ளிகள் தோறும், பொறுப்பாசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க, மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அப்போது, ரத்தத்தில் சராசரி ஹீமோகுளோபின் அளவு, 12 மி.கி., முதல் 15 மி.கி., வரை இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இதில் 7-க்கு குறைவாக இருந்தால் அதிக ரத்தசோகை எனவும், 7.1 முதல் 9.9 இருந்தால் சுமாரான ரத்தசோகை எனவும், 10 முதல் 12 வரை இருந்தால் குறைந்த ரத்தசோகை எனவும் கண்டறியப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைவு, குடற்புழு பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படும் என்பதால், அதற்ககேற்ப ஆலோசனையும் அளிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் சிகிச்சை, இரும்பு சத்து மருந்துகள் வழங்கி குணமடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவிர, பீட்ரூட், மாதுளை உள்ளிட்ட ஜூஸ் மட்டுமின்றி சுவரொட்டி, முருங்கை உள்ளிட்டவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us