Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்

ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்

ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்

ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்

ADDED : ஜூன் 08, 2025 10:37 PM


Google News
கோவை; கோவை தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம் வழங்கப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாறுதல் செய்யப்பட்டனர். மாறுதலாகி சென்றவர்களுக்கு பதிலாக, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் பொறுப்பு அதிகாரிகள் என்பதற்கான உத்தரவு, அரசிடமிருந்து வரவில்லை. உத்தரவு வந்தபின்பே அதிகாரிகள், பணியாளர்கள் சம்பளத்துக்கான கையெப்பமிட வேண்டும்.

இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக கோவை தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

இந்த தகவல் வெளியானதும், இரு நாட்களுக்கு முன் பில் தயாரித்து, சம்பளம் வழங்கப்பட்டது. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us