/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புரட்டாசி சனிக்கிழமை விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு புரட்டாசி சனிக்கிழமை விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 21, 2025 11:05 PM

வால்பாறை; வால்பாறையில் பாலாஜி கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தன.
புரட்டாசி சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் வால்பாறை அடுத்துள்ள அக்காமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. காலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமமும், 5:00 மணிக்கு பால், மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு, பெருமாளுக்கு அபிேஷக பூஜை நடந்தது.
தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர், ஆஞ்சநேயர், மாரியம்மன் ஆகியோருக்கும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.
அதன் பின் பெருமாள் தேவியருடன் தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி இறைவனை மகிழ்வித்தனர். புரட்டாசி பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.