/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சொத்து வரி செலுத்துவதற்கு இன்றும், நாளையும் முகாம் சொத்து வரி செலுத்துவதற்கு இன்றும், நாளையும் முகாம்
சொத்து வரி செலுத்துவதற்கு இன்றும், நாளையும் முகாம்
சொத்து வரி செலுத்துவதற்கு இன்றும், நாளையும் முகாம்
சொத்து வரி செலுத்துவதற்கு இன்றும், நாளையும் முகாம்
ADDED : மார் 21, 2025 11:11 PM
கோவை; கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள் செலுத்துவதற்கு வசதியாக இன்றும் (22ம் தேதி), நாளையும் (23ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கிழக்கு மண்டலம்: விசுவாசபுரம் ரேஷன் கடை, வீரியம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில், காளப்பட்டி நேரு நகர் பஸ் ஸ்டாப் அருகில், சவுரிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சமுதாய கூடம், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி மாநகராட்சி பள்ளி, ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானம்.
மேற்கு மண்டலம்: சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் மைதானம்.
வடக்கு மண்டலம்: ஜனதா நகர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, சுப்பிரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், மணியகாரம்பாளையம் அம்மா உணவகம், காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, காமதேனு நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், கணபதி டீச்சர்ஸ் காலனி சுகாதார ஆய்வாளர் அலுவலகம்.
தெற்கு மண்டலம்: குனியமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சுண்டக்காமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்.
மத்திய மண்டலம்: சங்கனுார் நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா, நியூ கலெக்சன் சென்டர் பெருமாள் கோவில் வீதி, கெம்பட்டி காலனி ஒக்கிலியர் காலனி ஸ்கூல்.
* சுண்டப்பாளையம் பெருமாள் கோவில், கரும்புக்கடை பிலால் நகர், குனியமுத்துார் விநாயகர் கோவில் வீதி ஆகிய இடங்களில் இன்று (சனிக்கிழமை) மட்டும். பூசாரிபாளையம் சமுதாய கூடம், பிள்ளையார்புரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-2, போத்தனுார் சாரதா மில் ரோடு ஆகிய இடங்களில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.