Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அஞ்சலக ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

அஞ்சலக ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

அஞ்சலக ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

அஞ்சலக ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

ADDED : ஜன 04, 2024 12:00 AM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, அஞ்சல் கோட்டம் சார்பில், அஞ்சலக ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள், வரும், 19ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. வரும், 10ம் தேதி வரை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்படும்.

மனுக்களை, அஞ்சலக ஓய்வூதியர்கள், 'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், பொள்ளாச்சி அஞ்சல் கோட்டம், பொள்ளாச்சி - 642 001' என்ற முகவரிக்கு, தபாலிலோ அல்லது 'dopollachi.tn@indiapost.gov.in' என்ற மின்அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.

மேலும், தபாலில் அனுப்பும் போது உறையின் மீதும், மின் அஞ்சலில் அனுப்பும் போது பொருளிலும் 'பென்ஷன் அதாலத்' என குறிப்பிட வேண்டும். இதில், சட்ட ரீதியான மற்றும் கொள்கை சம்பந்தப்பட்ட குறைகளை எடுத்துக்கொள்ள இயலாது, என, கோட்ட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us