/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை நகரில் களைகட்டிய பொங்கல் விழா!கோவை நகரில் களைகட்டிய பொங்கல் விழா!
கோவை நகரில் களைகட்டிய பொங்கல் விழா!
கோவை நகரில் களைகட்டிய பொங்கல் விழா!
கோவை நகரில் களைகட்டிய பொங்கல் விழா!

கற்பகம் பல்கலை
இப்பல்கலையில், பொங்கல் விழாவை துணைவேந்தர் வெங்கடாசலபதி துவக்கி வைத்தார்.
அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி
புலியகுளம் அரசு மகளிர் அறிவியல் கல்லுாரியில், பொங்கல் விழாவை அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர். வளாகம் முழுவதும் வண்ண கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்தனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரி
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், பாரம்பரியப் பண்பாட்டு விழாவாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பட்டிமன்றம், கிராமிய நடனங்களோடு பொங்கல் வைத்துக் மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். கல்லுாரியெங்கும் வண்ணக் கோலங்களோடு மாணவிகளின் மகிழ்ச்சி ஆரவாரமும் சேர்ந்து கொள்ள, பொங்கல் விழா களைகட்டியது.
கோவை அரசு கலை கல்லுாரி
கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் துறை வாரியாக, தனித்தனியாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்த மாணவர்கள், நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்து நினைவுகளை சேகரித்துக்கொண்டனர்.
ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி
கல்லுாரி மாணவ மாணவியர் வேட்டி சட்டை, சேலைகளை அணிந்து பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர்.பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. பம்பரம் விடுதல், பல்லாங்குழி, ஐந்து கல், பறையடித்தல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும்; அம்மியில் மஞ்சள் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்தல், மருதாணி வைத்தல், பூ கட்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்பத்துடனே பிறந்து, தொழில்நுட்பத்துடனே வாழும் இன்றைய தலைமுறையினருக்கு, இந்த விளையாட்டுக்கள் புது உற்சாகம் தந்தன.
நிர்மலா மகளிர் கல்லுாரி
இக்கல்லுாரியில், தமிழ்த்துறையுடன் இணைந்து அனைத்துத் துறைகளும் இணைந்து பொங்கல் திருநாளை கொண்டாடினர்.மாணவிகள், நாட்டுப்புற நடனம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடினார்கள். உறியடித்தல், பறையடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.கல்லுாரி செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி பியோலா உட்பட அனைவரும் பங்கேற்றனர்.