Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரவுடிகளுக்கு குறி; போலீசார் அதிரடி

ரவுடிகளுக்கு குறி; போலீசார் அதிரடி

ரவுடிகளுக்கு குறி; போலீசார் அதிரடி

ரவுடிகளுக்கு குறி; போலீசார் அதிரடி

ADDED : மார் 24, 2025 11:59 PM


Google News
பெ.நா.பாளையம்; கோவை புறநகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மீறல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கண்காணித்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர, இரவு நேர உணவு விடுதிகளில் மது விநியோகம் நடக்கிறதா என்பது குறித்தும், அங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் குறித்தும், ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்கள் பணியாற்றுகின்றனரா என்பது குறித்தும், அவர்கள் தங்கி இருக்கும் அறைகளிலும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரவுடிகள் பட்டியலில், 21 நபர்கள் உள்ளனர். இவர்கள், எந்த இடத்தில் தங்கி உள்ளனர், எங்கு பணியாற்றுகின்றனர், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us