/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி
கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி
கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி
கட்டடத்திலிருந்து விழுந்து பெயின்டர் பலி
ADDED : ஜூன் 12, 2025 11:46 PM
போத்தனுார்; கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது வீட்டில் தற்போது பெயின்ட் அடிக்கும் பணி நடக்கிறது. இதனை, முத்தையா நகரை சேர்ந்த சுரேஷ், 42 என்பவர் செய்து வந்தார்.
நேற்று காலை சுமார், 20 அடி உயரத்தில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த சுரேஷ், எதிர்பாராவிதமாக தவறி கீழே விழுந்தார்.
தலையில் படுகாயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சுந்தரா புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.