Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

ADDED : ஜூன் 16, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
கோவை; உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

தேசிய மாணவர் படை கோவை 6 டி.என்., மெட் சி.ஓ.ஓய்., என்.சி.சி., மற்றும் கோவை குரூப் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

100 மாணவர்கள் ரத்தம் தானம் செய்தனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய ரத்ததான முகாம், மதியம் 12:00 வரை நடந்தது.

துவக்க விழாவுக்கு, சுபேதார் மாரியப்பன், சுபேதார் வினோத்சிங், ஹவில்தார் சத்யம் சிங், ஹவில்தார் தீபக் ஆகியோர் தலைமைவகித்தனர்.

கோவையின் பல்வேறு பட்டாலியன் மற்றும் கம்பெனிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us