Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போனில் பேசியவரை தாக்கியவர் கைது

போனில் பேசியவரை தாக்கியவர் கைது

போனில் பேசியவரை தாக்கியவர் கைது

போனில் பேசியவரை தாக்கியவர் கைது

ADDED : மே 21, 2025 12:14 AM


Google News
போத்தனூர், ; கோவை, கரும்புக்கடை, சேரன் நகர், நான்காவது வீதியை சேர்ந்தவர் அஹமது தவுபிக், 20. கடந்த, 18ம் தேதி இரவு முத்து காலனியிலுள்ள பள்ளி ஒன்றின் அருகே நின்று, மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பைசல் ரஹ்மான் என்பவர், சுலைமான் என்பவரின் சகோதரருடன் அங்கு வந்து, அஹமது தவுபிக்கிடம், சத்தம் போட்டு பேச வேண்டாம் என கூறினார். வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரும் சேர்ந்து செங்கல், இரும்பு ராடால் தாக்கினர். அங்கிருந்தோர் அஹமது தவுபிக்கை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரில், கரும்புக்கடை போலீசார் பைசல் ரஹ்மானை கைது செய்தனர். சுலைமானின் தம்பியை தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us