Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாயிகளுக்கு லுாலுா ஆதரவுக்கரம்

விவசாயிகளுக்கு லுாலுா ஆதரவுக்கரம்

விவசாயிகளுக்கு லுாலுா ஆதரவுக்கரம்

விவசாயிகளுக்கு லுாலுா ஆதரவுக்கரம்

ADDED : மார் 25, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
கோவை; பிரபல லுாலுா நிறுவனம், பொள்ளாச்சியில் ஒரு மிகப்பெரிய வேளாண் உற்பத்தி திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

பொள்ளாச்சி அருகே கணபதிபாளையத்தில், லுாலுா குழுமத்தால் 160 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக முதல் கட்டமாக, 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் தொடங்கியிருக்கின்றன.

உலகின் பல பகுதிகளில் இயங்கி வரும், லுாலுா ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்காக இங்கிருந்து காய்கறி, பழங்கள் கொள்முதல் செய்யப்படும். இதன் வாயிலாக, இயற்கை வேளாண் முறைகளை பயன்படுத்துவதில், இக்குழுமம் உறுதியாக இருக்கிறது.

லுாலுா குழுமத்தின் உலகளாவிய செயல்பாடுகள் துறை இயக்குனர் சலீம், முதுநிலை வேளாண் ஆலோசகர்கள் சங்கரன், கார்த்திகேயன், லுாலுா குழுமத்தின் பழங்கள் மற்றும் காய்கறி பிரிவிற்கான இயக்குனர் சுல்பிகர் கடாவத், பேர் எக்ஸ்போர்ட்சின் தலைமை செயலாக்க அதிகாரி நஜ்முதீன், லுாலுா குரூப் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி ரஜித் ராதாகிருஷ்ணன், ஊடகப் பிரிவுத் தலைவர் ஸ்வராஜ், லுாலுா துபாய் நிறுவனத்தின் பழங்கள் மற்றும் காய்கறி கொள்முதல் மேலாளர்சந்தோஷ் மேத்யூ ஆகியோர்பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us