Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் இன்று 'லோக் அதாலத்'

கோவையில் இன்று 'லோக் அதாலத்'

கோவையில் இன்று 'லோக் அதாலத்'

கோவையில் இன்று 'லோக் அதாலத்'

ADDED : ஜூன் 14, 2025 06:33 AM


Google News
கோவை; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதலாத்' விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி,வாகன விபத்து இழப்பீடு,நில ஆர்ஜிதம் , சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்டவழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் லோக்அதாலத் விசாரணையை, மாவட்ட நீதிபதி விஜயா துவக்கி வைக்கிறார். மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்குகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us