Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு வழிபாடு

ADDED : ஜூன் 06, 2025 11:40 PM


Google News
அன்னுார்; மத்திரெட்டிபாளையம், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் நேற்று திருவிளக்கு வழிபாடு நடந்தது.

மத்திரெட்டிபாளையத்தில் பழமையான ஏண்டம்மா, வரதராஜ பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2001 மற்றும் 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மீண்டும் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. காலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதையடுத்து புண்ணிய நதிகளின் தீர்த்தம், கலசங்கள், முளைப்பாலிகை ஆகியவை வாணவேடிக்கையோடு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று (7ம் தேதி) காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை (8ம் தேதி) காலை 7:30 மணிக்கு மூலவர், பரிவார தெய்வங்கள் மற்றும் விமான கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து தச தரிசனம், மகா தீபாராதனை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us