Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவுசிகா நீர் கரங்கள் நிர்வாகி கவுரவிப்பு

கவுசிகா நீர் கரங்கள் நிர்வாகி கவுரவிப்பு

கவுசிகா நீர் கரங்கள் நிர்வாகி கவுரவிப்பு

கவுசிகா நீர் கரங்கள் நிர்வாகி கவுரவிப்பு

ADDED : ஜூன் 24, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
கோவை; தமிழக அரசின் நீர் நிலை பாதுகாவலர் விருது பெற்ற, கவுசிகா நீர் கரங்கள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செல்வராஜ்க்கு நன்றி பாராட்டு விழா மற்றும் கவுசிகா குடும்ப சங்கமம் 2025 விழா, சரவணம்பட்டியில் நடந்தது.

செல்வராஜ் பேசுகையில்,''அமைப்பு ரீதியாக இன்னும் பல துாரம் போக வேண்டியுள்ளது. இன்னும், 100 குளங்களை புனரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள், பயனாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி, பணிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். குளங்களை சீரமைக்க ஏராளமான தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளித்து உதவியுள்ளன. தொடர்ந்து பணி செய்ய வேண்டும்,'' என்றார்.

'சி4 டிஎன்' பொறுப்பாளர் மணியன் தலைமை வகித்தார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் பொது மேலாளர் சரவணன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கவுசிகா நீர்கரங்கள் அமைப்பின் இணையதளம் துவக்கப்பட்டது. செல்வராஜ்க்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us