Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐ.பி.எல்., சூதாட்டம்; மேலும் ஒருவர் கைது கார், பணம் பறிமுதல்; வங்கி கணக்கு முடக்கம்

ஐ.பி.எல்., சூதாட்டம்; மேலும் ஒருவர் கைது கார், பணம் பறிமுதல்; வங்கி கணக்கு முடக்கம்

ஐ.பி.எல்., சூதாட்டம்; மேலும் ஒருவர் கைது கார், பணம் பறிமுதல்; வங்கி கணக்கு முடக்கம்

ஐ.பி.எல்., சூதாட்டம்; மேலும் ஒருவர் கைது கார், பணம் பறிமுதல்; வங்கி கணக்கு முடக்கம்

ADDED : மே 22, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
கோவை; கோவையில், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அர்ஜூனன்,35; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, சொக்கம்புதுார் இந்திரா நகரை சேர்ந்த ராஜகணேசன்,30, இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார்.

ஐ.பி.எல்., போட்டியின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டு, 'பெட்டிங்' செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம். தனது 'பெட்டிங்' கணக்கை தருவதாக ராஜகணேஷ் கூறியிருக்கிறார். இதையடுத்து, பல்வேறு தவணைகளாக ரூ.4.25 லட்சத்தை அர்ஜூனன் கொடுத்தார். பணம் பெற்று நீண்ட நாட்களாகியும், 'பெட்டிங்' கணக்கு மற்றும் பணம் தராமல் இருந்துள்ளார்.

சொக்கம்புதுாரில் உள்ள ராஜகணேஷ் வீட்டுக்கு நேரில் சென்று கேட்டபோது, 'பணத்தை நண்பர் சவுந்தரராஜனிடம் கொடுத்துள்ளேன்; விரைவில் கணக்கு விவரங்களை தருவார்' என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செல்வபுரம் போலீசில் அர்ஜூனன் புகார் அளித்தார். போலீசார் ராஜகணேஷ் மற்றும் சவுந்தரராஜன் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அவருக்கு, ஐ.பி.எல்., சூதாட்ட ஏஜன்டுகளுடன் தொடர்பு இருப்பது; ஏற்கனவே ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்டு, கைதாகிய சவுந்தரராஜனிடம் பணம் கொடுத்திருப்பது தெரியவந்தது.

ராஜகணேஷிடம் இருந்து ரொக்கம் ரூ.2.35 லட்சம், மொபைல் போன், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

வங்கி கணக்கில் இருந்த ரூ.15.54 லட்சத்தை முடக்க, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராஜகணேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us