Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாக்கு நாற்றுகள் வாங்க அழைப்பு

பாக்கு நாற்றுகள் வாங்க அழைப்பு

பாக்கு நாற்றுகள் வாங்க அழைப்பு

பாக்கு நாற்றுகள் வாங்க அழைப்பு

ADDED : செப் 14, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தமிழக அரசின் கல்லாறு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் அருண் குமார் கூறுகையில், ''கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய 60 ஆயிரம் மொஹித் நகர் பாக்கு மர நாற்றுகள் மற்றும் 20 ஆயிரம் மங்களா பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

ஒரு பாக்கு மர நாற்றின் விலை ரூ.20 ஆகும். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாற்றுகளை வாங்கி கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 8526371711, 8778722484, 9629456181 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள லாம்,'' என்றார்.----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us