Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : டிச 01, 2025 02:06 AM


Google News
கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து, கோவையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ரோட்டில் உள்ள, கோவை கோட்ட அலுவலகம் வளாகத்தில், நடந்த போராட்டத்துக்கு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஏற்கனவே இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொண்டு வரபட்டுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கோட்டச் செயலாளர் துளசிதரன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இணை செயலாளர் கிரிஜா மற்றும் தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us