Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்து வியாபாரிகள் நல மாநாடு திரளாக பங்கேற்க திட்டம்

 இந்து வியாபாரிகள் நல மாநாடு திரளாக பங்கேற்க திட்டம்

 இந்து வியாபாரிகள் நல மாநாடு திரளாக பங்கேற்க திட்டம்

 இந்து வியாபாரிகள் நல மாநாடு திரளாக பங்கேற்க திட்டம்

ADDED : டிச 01, 2025 02:06 AM


Google News
கோவை: இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு, நேற்று காட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன் பேசியதாவது:

வேல்வழிபாடு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்து முன்னணி அமைப்பான இந்து வியாபாரிகள் நல சங்க மாநாடு, வரும் ஜன.,4ல் கோவை ஐயப்பா சேவா சங்க அரங்கில் நடக்கிறது. சுதேசி பொருளாதாரத்தை வளர்க்கும் வகையிலும், இந்து வியாபாரிகளை இணைக்கும் வகையிலும் இம்மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், கோவையில் உள்ள வியாபார பெருமக்கள் பல ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோட்ட பொதுச்செயலாளர் பாபா, கோட்ட செயலாளர் பாலன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us