/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு 'பச்சை' கம்பள வரவேற்பு!முதல் மாதமே 83 சதவீத சீட் நிறைவுபெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு 'பச்சை' கம்பள வரவேற்பு!முதல் மாதமே 83 சதவீத சீட் நிறைவு
பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு 'பச்சை' கம்பள வரவேற்பு!முதல் மாதமே 83 சதவீத சீட் நிறைவு
பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு 'பச்சை' கம்பள வரவேற்பு!முதல் மாதமே 83 சதவீத சீட் நிறைவு
பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு 'பச்சை' கம்பள வரவேற்பு!முதல் மாதமே 83 சதவீத சீட் நிறைவு
UPDATED : பிப் 06, 2024 02:15 AM
ADDED : பிப் 06, 2024 01:19 AM

-நமது நிருபர்-
அதிகாலை நேரத்தில் புறப்பட்டாலும், கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலில், ஜனவரியில் 83 சதவீதம் இருக்கைகள் நிறைந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கோவை-பெங்களூரு இடையே, கடந்த ஜன.,1லிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 478 ஏ.சி., சேர் கார் இருக்கைகளும், 52 எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளும் உள்ளன. இதற்கு முறையே, ரூ.1025 மற்றும் ரூ.1930 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், அதிகாலை 5:00 மணிக்கு, கோவையில் புறப்பட்டு, மதியம் 11:30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.
அங்கிருந்து, மதியம் 1:40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு, கோவை வந்தடைகிறது. கோவையில் இந்த ரயில் புறப்படும் நேரம், அதிகாலை நேரமாக இருப்பதால், இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது.
ஆனால் கடந்த ஒரு மாதத்தில், வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, இதற்கான தேவையையும், வரவேற்பையும் உணர்த்தியுள்ளது.
வாரத்தில் ஆறு நாட்கள் வீதமாக, கடந்த ஜனவரியில் 27 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த 27 நாட்களில், கோவை-பெங்களூரு டிரிப்பை மட்டும் கணக்கிட்டால், 12 ஆயிரம் பேர் வரை பயணம் செய்துள்ளனர்.
அதாவது, 10 ஆயிரத்து 746 பேர், ஏ.சி., சேர் கார் இருக்கைகளிலும், 1164 பேர், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளிலும் பயணம் செய்துள்ளனர்.
இது ஒட்டு மொத்த இருக்கை எண்ணிக்கையில், 83.23 சதவீதம் நிறைந்துள்ளதைக் காண்பித்துள்ளது. கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் டிரிப்களில் மட்டுமே, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது.