/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மோசமான வானிலை கோவை திருப்பப்பட்ட விமானங்கள் மோசமான வானிலை கோவை திருப்பப்பட்ட விமானங்கள்
மோசமான வானிலை கோவை திருப்பப்பட்ட விமானங்கள்
மோசமான வானிலை கோவை திருப்பப்பட்ட விமானங்கள்
மோசமான வானிலை கோவை திருப்பப்பட்ட விமானங்கள்
ADDED : மார் 22, 2025 11:24 PM
கோவை: பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக, ஏழு விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன.
பெங்களூருவில் மாலை 5:00 மணிக்கு தரையிறங்க வேண்டிய டில்லி - பெங்களூரு விமானம், மாலை 4:50 மணிக்கு தரையிறங்க வேண்டிய, துாத்துக்குடி - பெங்களூரு விமானம், மாலை 4:20 மணிக்கு தரையிறங்க வேண்டிய, விசாகப்பட்டினம் - பெங்களூரு விமானம், மாலை 5:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய இரு மும்பை - பெங்களூரு விமானம், மாலை 5:05 மணிக்கு தரையிறங்க வேண்டிய போர்ட் லுாயிஸ் - பெங்களூரு விமானம், மாலை 3:30 மணிக்கு தரையிறங்க வேண்டிய சிலிகுரி - பெங்களூரு விமானங்கள், கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
வானிலை சீரடைந்ததும் பயணிகளுடன் விமானங்கள், மீண்டும் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்லும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.