Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

ஆடு வளர்க்க இலவச பயிற்சி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

ADDED : ஜூன் 06, 2025 10:41 PM


Google News
பொள்ளாச்சி, ; கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆடுவளர்ப்புக்கு இலவச பயிற்சி, வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில், ஆடு ரகங்கள், ஆடு வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை, தடுப்பூசி விபரங்கள் குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சியானது, காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும். இத்தகவலை, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us