Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடமாடும் ஏ.டி.எம். செயல்படுத்த எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

 நடமாடும் ஏ.டி.எம். செயல்படுத்த எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

 நடமாடும் ஏ.டி.எம். செயல்படுத்த எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

 நடமாடும் ஏ.டி.எம். செயல்படுத்த எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

ADDED : டிச 01, 2025 01:29 AM


Google News
வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில், நடமாடும் ஏ.டி.எம்., அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில், 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும், 7 மற்றும், 10ம் தேதிகளில் சம்பளம் வழங்கப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதம் தோறும் வங்கி வாயிலாக சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம்., மையம் இல்லாத நிலையில், வால்பாறை நகரில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் மாதம் தோறும் தவிக்கின்றனர்.

குறிப்பாக, ேஷக்கல்முடி, கருமலை, அய்யர்பாடி, சோலையாறுடேம், சின்கோனா, கவர்க்கல் உள்ளிட்ட இடங்களில், ஏ.டி.எம்., மையம் இல்லை. இதனால், இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வால்பாறை நகரில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தொழிலாளர்கள் கூறியதாவது:

எஸ்டேட்களில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகிறோம். ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் உள்ளது. ஆனால், அந்த வாகனம் அனைத்து எஸ்டேட் பகுதிக்கும் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே தேசிய மயமாக்கப்பட்ட யூனியன் வங்கி, இந்தியன் வங்கி சார்பில் கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., வாகனங்கள் இயக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us