ADDED : மே 27, 2025 09:54 PM
போத்தனூர்; கோவை, ஈச்சனாரி அருகேயுள்ள முத்து நகரை சேர்ந்தவர் செந்தில்நாத்; மகன் ரோஹன்குமார், 22; தனியார் இன்ஜி., கல்லூரி இறுதியாண்டு மாணவர். கடந்த, 14ல் செந்தில்நாத், மனைவி செல்வி ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினர். வீட்டில் மகன் ரோஹன்குமாரை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.