Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

ADDED : மார் 25, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஏகாதசி வைபவம் நடந்தது.

காரமடை அரங்கநாதர் கோவிலில் நேற்று மாசி மாத கிருஷ்ண பட்ச, ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறந்து, அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன.

பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விஷ்வக்சேனர் ஆராதனம், புண்யா வசனம், நவ கலச ஆவாஹனம், திருமஞ்சனம் ஆகியவை நடந்தன.

அப்போது பஞ்ச சுக்தம், திவ்யா பிரபந்தத்தில் உள்ள, நீராட்டம் பாசுரங்கள் சேவிக்கப்பட்டது. நீல நிற பட்டு உடுத்திய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெள்ளி சப்ரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார்.

தொடர்ந்து உச்சக்கால பூஜை, சாற்றுமுறை சேவிக்கப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலர்த்தார்கள் வேதவியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி பாலாஜி, அர்ச்சகர் திருவேங்கடம் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us