Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மது போதையில் விபத்து; ஓட்டுநருக்கு சிறை

மது போதையில் விபத்து; ஓட்டுநருக்கு சிறை

மது போதையில் விபத்து; ஓட்டுநருக்கு சிறை

மது போதையில் விபத்து; ஓட்டுநருக்கு சிறை

ADDED : ஜூன் 21, 2025 12:13 AM


Google News
கோவை : கோவை, மைல்கல் பகுதியை சேர்ந்தவர் பூவம்மாள், 51; நேற்று மதியம், வீட்டு வேலைக்காக சித்தாபுதுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பூவம்மாள் ஆட்டோவின் அடியில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியினர், ஆட்டோ ஓட்டுநரை மீட்டனர். அப்போது, அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், பூவம்மாள் உடலை மீட்டுஆட்டோ ஓட்டுனர் சித்தாபுதுாரை சேர்ந்த தங்கவேல், 57 என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், மது போதையில் ஆட்டோவை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us