/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்பு சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்பு
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்பு
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்பு
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 21, 2025 11:54 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 12ம் தேதி காலை, 9:30 மணிக்கு சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஆற்றுப்பகுதியில் மூங்கில் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலரால் அலங்கரித்த மூங்கிலை, மேள, தாள, இசையுடன் கோவிலுக்கு கொண்டு வந்து, மூங்கில் மூன்றாக உடைக்கப்பட்டது. அதன்பின், முகூர்த்த காய் உடைத்து, உடைக்கப்பட்ட மூங்கிலில் நவதானியங்கள் கட்டி, அம்மனிடம் வைக்கப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா மற்றும் கிராமசாந்தி, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கம்பம் நடுதலும், பூவோடு எடுத்தலும் நடந்தது.
நேற்று காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று முதல், 27ம் தேதி வரை தினமும் காலை, மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 28ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.29ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 30ம் தேதி மாலை, இரண்டாம் நாள் தேர் வடம் பிடித்தல், 31ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. வரும், ஜூன் 1ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது.