Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாயில் கிளீனிங் பவுடர் கொட்டிய 'அன்புக்குரிய' நண்பர் கைது

வாயில் கிளீனிங் பவுடர் கொட்டிய 'அன்புக்குரிய' நண்பர் கைது

வாயில் கிளீனிங் பவுடர் கொட்டிய 'அன்புக்குரிய' நண்பர் கைது

வாயில் கிளீனிங் பவுடர் கொட்டிய 'அன்புக்குரிய' நண்பர் கைது

ADDED : மே 31, 2025 04:56 AM


Google News
போத்தனூர்; கோவை வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள, ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஹக்கீம், 50; லோடு மேன். உடன் பணிபுரிபவர் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார், 35. தினமும் பணி முடிந்த பின் இருவரும், மது குடிப்பது வழக்கம்.

அதுபோல் நேற்று முன்தினமும் இருவரும் மது குடித்தனர். அப்போது ஹக்கீமின் வாயினுள் சந்தோஷ்குமார், வெள்ளை நிற பவுடரை போட்டுள்ளார். இதில் ஹக்கீமின் தொண்டை, வயிற்றினுள் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் வந்தது.

அப்போது சந்தோஷ்குமார் தகாத வார்த்தைகளால் ஹக்கீமை திட்டிவிட்டு, அங்கிருந்து சென்றார். ஹக்கீம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரது புகாரில், போத்தனூர் போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில், கழிவு சுத்தப்படுத்த பயன்படுத்தும் பவுடரை, ஹக்கீமுக்கு கொடுத்தது தெரிந்தது. தொடர்ந்து, மதுக்கரை கோர்ட்டில் சந்தோஷ்குமாரை போலீசார் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us