Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது'

'சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது'

'சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது'

'சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது'

ADDED : பிப் 12, 2024 01:14 AM


Google News
போத்தனூர்;ஈச்சனாரி அருகேயுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சாகா பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில், கொடி ஏற்றுதல், ஆயுதமில்லா தற்காப்பு கலைகள். உடல் ஆரோக்கியம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

தென் தமிழக பொறுப்பாளர் ஆறுமுகம் பேசுகையில், நாட்டில் ஏற்ற, தாழ்வுகள் அகல, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும்.

தேசிய கடமையான தேர்தலில், அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு வாகனங்களை ஓட்ட தரக்கூடாது. நீர்நிலைகள், மயானம் ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.

பயிற்சியில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us