Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்

சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்

சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்

சிறுமி பலாத்காரம் சிறுவன், டிரைவர் சிக்கினர்

ADDED : செப் 20, 2025 10:53 PM


Google News
பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிராமத்தில், 13 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரது தாய், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

பொள்ளாச்சி சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் புகாரின்படி, மகளிர் போலீசார் விசாரித்தனர்.

போலீசார் கூறிய தாவது:

திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் காமாட்சி, 27 மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் தனித்தனியே, சிறுமியை காதலிப்பதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இருவரையும் அழைத்து விசாரித்ததில், பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us