ADDED : ஜூன் 10, 2025 09:43 PM
சூலுார்; வால்பாறை அடுத்த உருளிக்கல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார். 24. இவர் சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று, இரவு, 10:30 மணிக்கு, சூலுார் நோக்கி பைக்கில் சென்றார். தனியார் பள்ளி அருகே சென்ற போது, பைக் நிலை தடுமாறி, கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.