Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பலத்த காற்றினால் இலை வாழை பாதிப்பு

பலத்த காற்றினால் இலை வாழை பாதிப்பு

பலத்த காற்றினால் இலை வாழை பாதிப்பு

பலத்த காற்றினால் இலை வாழை பாதிப்பு

ADDED : மே 23, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
உடுமலை : உடுமலை பகுதியில், இலை வாழை சாகுபடி பரப்பு அதிகரித்து வரும் நிலையில், பலத்தகாற்றினால், நடப்பு சீசனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடுமலை ஏழு குள பாசன பகுதி மற்றும் நீர் வளம் அதிகமுள்ள பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்கின்றனர்.

கதளி, பூவன், நேந்திரன் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு, விற்பனைக்காக கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இலை வாழை ரகம் சாகுபடியிலும் உடுமலை பகுதியில், ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

உணவு பொருட்களை பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்ய அரசு தடை விதித்த பிறகு, இலை வாழைக்கு தேவை அதிகரித்தது.

விவசாயிகள் கூறுகையில், 'இலை வாழையில், கன்று நட்டு ஏழாம் மாதம் முதல் தொடர்ந்து, 24 மாதங்கள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இலை அறுவடை செய்யலாம். பூவன் வாழை இலைக்கு நல்ல விலை கிடைக்கிறது. நடப்பு சீசனில் பலத்த காற்று காரணமாக, இலைகள் கிழிந்து, அறுவடை பாதித்துள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us