Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஏலத்தில் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி

ஏலத்தில் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி

ஏலத்தில் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி

ஏலத்தில் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி

ADDED : செப் 17, 2025 08:57 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில், செவ்வாழை கிலோ - 70, நேந்திரன் --- 30, கதளி மற்றும் பூவன் --- 35, ரஸ்தாளி --- 40, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. மற்ற வாழைத்தார்கள் விலையில் மாற்றம் இல்லை.

வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், விலையும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் வாரங்களில் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us