/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் 492 பூத்களில் தி.மு.க.,வை விட அண்ணாமலைக்கு 44 ஆயிரத்து 389 ஓட்டு அதிகம்!கோவையில் 492 பூத்களில் தி.மு.க.,வை விட அண்ணாமலைக்கு 44 ஆயிரத்து 389 ஓட்டு அதிகம்!
கோவையில் 492 பூத்களில் தி.மு.க.,வை விட அண்ணாமலைக்கு 44 ஆயிரத்து 389 ஓட்டு அதிகம்!
கோவையில் 492 பூத்களில் தி.மு.க.,வை விட அண்ணாமலைக்கு 44 ஆயிரத்து 389 ஓட்டு அதிகம்!
கோவையில் 492 பூத்களில் தி.மு.க.,வை விட அண்ணாமலைக்கு 44 ஆயிரத்து 389 ஓட்டு அதிகம்!

பா.ஜ., ஓட்டு அதிகம்
ஏனெனில், 2019 தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற ஓட்டுகளை விட அதிகம். அத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியோடு, மூன்று லட்சத்து, 92 ஆயிரத்து, 7 ஓட்டுகளே பா.ஜ.,வுக்கு கிடைத்தன; இது, 31.47 சதவீதம்.
தி.மு.க., ஓட்டு குறைவு
தி.மு.க., கூட்டணியில். 2019ல் மா.கம்யூ., போட்டியிட்டது. அக்கட்சி வேட்பாளர் நடராஜன், ஐந்து லட்சத்து, 71 ஆயிரத்து, 150 ஓட்டுகள் பெற்றிருந்தார். இது, 45.85 சதவீதம். தற்போது அக்கூட்டணியில் ஒட்டிக்கொண்டுள்ள, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரன், ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 104 ஓட்டுகள் பெற்றிருந்தார். இது, 11.65 சதவீதம்.
தெற்கு தொகுதி ஒப்பீடு
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., போட்டியிட்டது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், 53 ஆயிரத்து, 209 ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போது அ.தி.மு.க., கூட்டணி இல்லாமலேயே, 53 ஆயிரத்து, 579 ஓட்டுகளை அண்ணாமலை பெற்றிருக்கிறார்.
அண்ணாமலைக்கே அதிக ஓட்டு!
கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகளை ஆய்வு செய்ததில், மொத்தமுள்ள, 2,048 பூத்களில், 492 பூத்களில் தி.மு.க.,வை விட, அண்ணாமலைக்கே அதிக ஓட்டு பதிவாகியிருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில், 128, வடக்கில், 105, சிங்காநல்லுாரில், 113, கவுண்டம்பாளையத்தில், 127, சூலுாரில், 83, பல்லடத்தில், 63 பூத்களில் பா.ஜ.,வுக்கு தி.மு.க.,வை விட அதிக ஓட்டு பதிவாகியுள்ளது.
கிராமப்புற ஓட்டு இழப்பு
என்றாலும் கூட, கவுண்டம்பாளையம், சூலுார், பல்லடம் ஆகிய மூன்று தொகுதிகளில் தி.மு.க., கூட்டணிக்கு கிராமப்புற மக்கள் பெருவாரியாக ஓட்டளித்திருக்கின்றனர். இத்தொகுதிகளில் மட்டும் தி.மு.க.,வுக்கு மூன்று லட்சத்து, 39 ஆயிரத்து, 167 ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை, இலவச மகளிர் பஸ், கல்லுாரி மாணவியருக்கு மாதாந்திர உதவித்தொகை, வங்கி கல்வி கடன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதை, அப்பகுதி மக்களிடம் தி.மு.க.,வினர் சேர்த்திருக்கின்றனர்.