Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மைக்கண் மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் விழா

மைக்கண் மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் விழா

மைக்கண் மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் விழா

மைக்கண் மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் விழா

ADDED : மே 29, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மைக்கண் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவில், அக்னி கம்பம் நடும் விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் பழைய சந்தைக்கடையில், மைக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசித் திருவிழா, கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் நடந்த அக்னி கம்பம் நடும் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நாளும் அம்மன் சுவாமிக்கு, ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது. காமதேனு அலங்காரத்தில் அம்மன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து முனியப்பன் கோவிலில் இருந்து பக்தர்கள், சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். பின்பு கம்பத்தை சுற்றி பக்தர்கள் ஆடி மகிழ்ந்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர் குழு தலைவர் சிவமூர்த்தி, அறங்காவலர் சக்திவேல், பத்மாவதிமற்றும் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us