Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் துறையில் வேலை வாய்ப்பு வரும் 20ல் நடக்கிறது சிறப்பு முகாம்

தனியார் துறையில் வேலை வாய்ப்பு வரும் 20ல் நடக்கிறது சிறப்பு முகாம்

தனியார் துறையில் வேலை வாய்ப்பு வரும் 20ல் நடக்கிறது சிறப்பு முகாம்

தனியார் துறையில் வேலை வாய்ப்பு வரும் 20ல் நடக்கிறது சிறப்பு முகாம்

ADDED : ஜூன் 17, 2025 11:01 PM


Google News
கோவை; கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. ஜூன் மாதத்துக்கான முகாம், வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்கள் சுய விபரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தேர்வு செய்யப்படுவோருக்கு, அப்போதே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

விபரங்களுக்கு: 0422 -2642388.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us