/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை குவிப்பு தடுப்பு வேலி அமைக்கணும் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை குவிப்பு தடுப்பு வேலி அமைக்கணும்
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை குவிப்பு தடுப்பு வேலி அமைக்கணும்
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை குவிப்பு தடுப்பு வேலி அமைக்கணும்
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை குவிப்பு தடுப்பு வேலி அமைக்கணும்
ADDED : ஜூன் 03, 2025 11:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, தன்னார்வ அமைப்பு உதவியுடன் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, மின்சாரம் சார்ந்த பயன்பாடுகளும், தேவைகளும் அதிகரித்து வருகின்றன.
அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது, குறைந்த மின்னழுத்தத்தால் விளக்குகள் எரியாமல் இருப்பது போன்ற பிரச்னை ஏற்படுவதை தடுக்க, கூடுதலாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில், டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். டிரான்ஸ்பார்மர் பராமரிப்பின் போது, மின்வாரிய ஊழியர்கள் அவற்றை அகற்ற முற்பட்டாலும், இந்த நிலை தொடர்கிறது.
எனவே, தன்னார்வ அமைப்பு உதவியுடன் டிரான்ஸ்பார்மரைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சில பகுதிகளில், டிரான்ஸ்பார்மருக்கு மிக அருகில், குப்பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால், பராமரிப்பு பணியின் போது சிரமம் ஏற்படுகிறது. மேலும், டிரான்ஸ்பார்மர்களில் 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்படும் போது, தீப்பொறி பறக்கும். அப்போது, குப்பையில் விழுந்து தீ விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதனால், டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, தன்னார்வ அமைப்பு உதவியுடன் தடுப்பு வேலி அமைக்க மின்வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.


