/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கடையின் பொருட்கள் நிரம்பிய நடைபாதை! ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பால் திணறும் பாதசாரிகள்கடையின் பொருட்கள் நிரம்பிய நடைபாதை! ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பால் திணறும் பாதசாரிகள்
கடையின் பொருட்கள் நிரம்பிய நடைபாதை! ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பால் திணறும் பாதசாரிகள்
கடையின் பொருட்கள் நிரம்பிய நடைபாதை! ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பால் திணறும் பாதசாரிகள்
கடையின் பொருட்கள் நிரம்பிய நடைபாதை! ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பால் திணறும் பாதசாரிகள்

புகார் செய்தும் பலனில்லை
பெர்க்ஸ் ஆர்ச் ரோடு, 60வது வார்டில், கால்வாயில் சிலர் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை தொடர்ந்து வீசிச்செல்கின்றனர். இதனால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
சாலையில் காத்திருக்கிறோம்
ராமநாதபுரம் வழியாக சிங்காநல்லுார் செல்லும் பயணிகள் தினந்தோறும், சிங்காநல்லுார் சிக்னலில் நெடுநேரம் காத்திருக்கின்றனர். காலை, மாலை வேளையில், இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
தொருநாய்களால் தொல்லை
இடையர்பாளையம், பி அண்ட் டி காலனியில், நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்வோரை கடிக்கின்றன. பைக்கில் செல்வோர், நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.
மூடப்படாத குழி
கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடவில்லை. குழந்தைகள் உள்பட பாதசாரிகள் விழுந்து விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.
குரங்குகளால் தொந்தரவு
தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் சுற்றுகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, இவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
எரியா விளக்கு
சுந்தராபுரம், மாச்சம்பாளையம், ராமசாமி கோனார் வீதியில், ' எஸ்.பி -13, பி -12' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த மூன்று மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
சாலையில் நடக்க அச்சம்
சரவணம்பட்டி, நான்காவது வார்டு, மில்லினியம் நகரில், கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றுகின்றன. வீதியில் சுற்றும், 30க்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் நடந்து செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன.
நாறும் கழிவுகள்
சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடன்சி சந்திப்பில், ஆர்.டி.ஓ., மைதானம் மேம்பாலம் அருகே, பெருமளவு குப்பை சாலையில் தேங்கிக்கிடக்கிறது. பல வாரங்களாக தேங்கியுள்ள கழிவுகள், அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
விபத்திற்கு வாய்ப்பு
வெள்ளக்கிணறு, கால்நடை மருத்துவமனை, வாழ்க வளமுடன் தவ மையத்தில், அத்திக்கடவு குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. புகாருக்குப் பின், உடைப்பை சரிசெய்த அதிகாரிகள் குழியை சரிவர மூடவில்லை. இரவுநேரங்களில், நடந்துசெல்வோர், பைக்கில் செல்வோர் விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.
துார்வார சாக்கடை
கோவை மாநகராட்சி, கூட்செட் ரோடு, 82வது வார்டு, ஓட்டல் ரத்னா ரெசிடென்சி அருகே, தாம்சன் பர்னிச்சர் அருகில், சாக்கடை கால்வாயை சரிவர துார்வாருவதில்லை. குப்பை, மண் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
நடைபாதை ஆக்கிரமிப்பு
ராமநாதபுரத்தில், சாலையோர கடைகளால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நடைபாதை முழுவதும் கடைகளுக்கான பொருட்கள், பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்துசென்று, விபத்திற்குள்ளாகின்றனர்.
சாலையில் தாறுமாறு பார்க்கிங்
மேட்டுப்பாளையம் ரோடு, ஐ.டி.ஐ., பேருந்து நிறுத்தம் அருகேவுள்ள ஓட்டலுக்கு வருவோர், சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துகின்றனர். பேருந்தில் ஏறவும், இறங்கவும் பயணிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.
விழுந்துதான் கடக்கணும்
காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில், ஐ.ஓ.பி., வங்கி எதிரே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை சிலேப்புகள் சிதிலமடைந்துள்ளது. பல இடங்களில் சிலேப் உடைந்து, குழிகளாக உள்ளது. நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் கீழே விழுகின்றனர்.
தொடரும் நீர்க்கசிவு
நவஇந்தியா சிக்னல் அருகே, குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. பெருமளவு குடிநீர் சாலையில் ஓடி, சாக்கடையில் கலக்கிறது. புகாருக்குப் பின் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இருப்பினும், நீர்க்கசிவு தொடர்கிறது.
குடிநீரின்றி தவிப்பு
மேட்டுப்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.,நகர், இ.பி., காலனி சுற்றுவட்டாரப் பகுதிகளில், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், வாரம் ஒருமுறையாவது வினியோகிக்க நடவடிக்கை வேண்டும்.