Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இம்மாதம் முடிய 'கலர் டிரஸ்' அணியலாம்! பள்ளி மாணவர்களுக்கு அவகாசம்

இம்மாதம் முடிய 'கலர் டிரஸ்' அணியலாம்! பள்ளி மாணவர்களுக்கு அவகாசம்

இம்மாதம் முடிய 'கலர் டிரஸ்' அணியலாம்! பள்ளி மாணவர்களுக்கு அவகாசம்

இம்மாதம் முடிய 'கலர் டிரஸ்' அணியலாம்! பள்ளி மாணவர்களுக்கு அவகாசம்

ADDED : ஜூன் 20, 2024 05:10 AM


Google News
பொள்ளாச்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாத நிலையில், இம்மாதம் இறுதி வரை மட்டுமே 'கலர் டிரஸ்' பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. அவ்வகையில், பள்ளி திறக்கும் நாளில் இரண்டு ஜோடி சீருடை, காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை முடிந்து, மேலும் இரண்டு ஜோடி சீருடை வழங்கப்படும்.

ஆனால், நடப்பு கல்வியாண்டு, பள்ளி திறந்து ஒரு வாரம் கடந்தும் புதிய சீருடை வழங்கப்படவில்லை.

இதனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியர் சிலர், கடந்த ஆண்டு பயன்படுத்திய சீருடைகளையே அணிந்து வருகின்றனர். சீருடை இல்லாத மாணவர்கள், 'கலர் டிரஸ்' அணிந்து பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

அவ்வகையில், 'கலர் டிரஸ்' பயன்பாட்டிற்கு, ஒரு மாத காலம் மட்டுமே மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமயைாசிரியர்கள் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டு, பள்ளிகள் துவங்கியும் சீருடைகள் வழங்கப்படவில்லை. இலவச புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, சீருடை வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் சீருடை அல்லாத 'கலர் டிரஸ்'சில் வருகை புரிகின்றனர். பிற மாணவர்கள், பழைய சீருடையில் வருமாறு தெரிவிக்கப்பட்டுளளது. ஆனால், சீருடைகளின் தரம் ஓராண்டுக்கு மேல் நீடிக்காது.

இம்மாதம் இறுதி வரை 'கலர் டிரஸ்' பயன்பாட்டிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள், இலவச சீருடை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வசதியுள்ளவர்கள் சொந்த செலவில் புது சீருடைகளை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பலவிதமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சீருடை திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. திட்டத்தின் நோக்கம் பாழ்படாமல் இருக்க, சீருடையை விரைவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us