Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மன உளைச்சலில் தொழிலாளி தற்கொலை

மன உளைச்சலில் தொழிலாளி தற்கொலை

மன உளைச்சலில் தொழிலாளி தற்கொலை

மன உளைச்சலில் தொழிலாளி தற்கொலை

ADDED : ஜூன் 13, 2024 11:21 PM


Google News
நெகமம் : தஞ்சாவூர், ஒரத்தநாடை சேர்ந்தவர் வெங்கடேஷ், 62. இவர், நெகமத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த, 17 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

இவருக்கு, கடந்த 5 ஆண்டுகளாக உடல் நிலையில் அவ்வப்போது தொந்தரவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த வெங்கடேஷ் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு, தனது அறைக்கு செல்வதாக கூறி விட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மறுநாள் காலையில் வேலைக்கு வராததால் அவரை ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடிப்பார்த்த போது, தனியார் கிணற்றில் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us