Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வ.உ.சி., பூங்கா மான்கள் வனத்துக்குள் விடுவிப்பு

வ.உ.சி., பூங்கா மான்கள் வனத்துக்குள் விடுவிப்பு

வ.உ.சி., பூங்கா மான்கள் வனத்துக்குள் விடுவிப்பு

வ.உ.சி., பூங்கா மான்கள் வனத்துக்குள் விடுவிப்பு

ADDED : ஜூலை 20, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
கோவை;கோவை, வ.உ.சி., வன உயிரில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த, கடமான்களில் மேலும் 5 மான்கள் நேற்று வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.

வ.உ.சி., பூங்காவுக்கு, உயிரியல் பூங்கா அந்தஸ்து, மத்திய அரசால் மறுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பராமரிக்கப்பட்டு வந்த வன உயிரினங்கள் வனத்துறையினரால், உரிய பராமரிப்புக்குப் பின் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்படுகின்றன. முன்னதாக, 11 கடமான்கள் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளன.

நேற்று மேலும் 5 கடமான்கள், காச நோய் உள்ளிட்ட தொற்றுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின், போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.

இந்த மான்கள், தீவனம், நீர் உட்கொள்வது, அவற்றின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us