/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வரத்து குறைவால் விலை சரியாத தக்காளி வரத்து குறைவால் விலை சரியாத தக்காளி
வரத்து குறைவால் விலை சரியாத தக்காளி
வரத்து குறைவால் விலை சரியாத தக்காளி
வரத்து குறைவால் விலை சரியாத தக்காளி
ADDED : ஜூன் 13, 2024 11:55 PM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வரத்து குறைந்துள்ளதால், இரண்டு வாரத்திற்கு மேலாக தக்காளி விலை குறையாமல் உள்ளது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள், தங்களின் விளை பொருட்களை தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்களுக்கு, தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தக்காளி விலையும் உயர்ந்துள்ளது. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 800 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. கடந்த இரண்டு வாரங்களாக, இதே விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.