/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்யும்மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்யும்
மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்யும்
மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்யும்
மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்யும்
ADDED : ஜூலை 05, 2024 02:42 AM
கோவை;கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று 2 மி.மீ., நாளை 4 மி.மீ., 7ம் தேதி 2 மி.மீ. மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28.-30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்று மணிக்கு, 14-20 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.
வரும் 3 நாட்களுக்கு மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துாறல் அல்லது லேசான மழை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.