ADDED : ஜூலை 15, 2024 02:42 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையில் மாற்றமில்லாமல் அதே விலை நீடிக்கிறது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலையில் மாற்றமில்லாமல், கடந்த வார விலையான, 37 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 14,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இளநீர் வரத்து தொடர்ந்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. எனினும் தரம் குறைந்த இளநீர் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.