Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பரிதவிக்க விட்டு செல்கிறது தாய் யானை... அம்மா... ஏம்மா? பாசத்துக்கு ஏங்கி நிற்கிறது குட்டி யானை!

பரிதவிக்க விட்டு செல்கிறது தாய் யானை... அம்மா... ஏம்மா? பாசத்துக்கு ஏங்கி நிற்கிறது குட்டி யானை!

பரிதவிக்க விட்டு செல்கிறது தாய் யானை... அம்மா... ஏம்மா? பாசத்துக்கு ஏங்கி நிற்கிறது குட்டி யானை!

பரிதவிக்க விட்டு செல்கிறது தாய் யானை... அம்மா... ஏம்மா? பாசத்துக்கு ஏங்கி நிற்கிறது குட்டி யானை!

ADDED : ஜூன் 08, 2024 12:48 AM


Google News
தொண்டாமுத்தூர்;அட்டுக்கல்லில் தாயை பிரிந்த குட்டி யானையை, மீண்டும் தாயிடம் சேர்க்க மூன்று நாட்களாக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, குட்டியை வேறு யானைக்கூட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை வனப்பகுதியில், கடந்த மே 30ம் தேதி உடல் நலக்குறைவால், 40 வயது பெண் யானை, தனது குட்டியுடன் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அப்போது குட்டி யானை, தாயை விட்டு பிரிந்து, வேறு யானையுடன் சென்றது. ஐந்தாம் நாள் சிகிச்சையின் போது, பெண் யானையின் உடல்நலம் முற்றிலும் குணமடைந்தது. இதையடுத்து, யானையை வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

இந்நிலையில், தாயை விட்டு பிரிந்த குட்டி யானை, கடந்த 4ம் தேதி, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பச்சான் வயல் பகுதியில், தனியாக இருப்பது தெரியவந்தது.

வனத்துறையினர் குட்டி யானையை பிடித்து வந்து, யானை மடுவு மற்றும் அட்டுக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த, அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்களாக முயன்றும் முடியவில்லை. மூன்றாம் நாளான நேற்று, கோவை வனத்துறையினர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக சிறப்பு குழுவினர் இணைந்து, குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால், குட்டி அருகில் வந்த போது, தாய் யானை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், மூன்று நாட்களாக வனத்துறையினர் குட்டியை தாயிடம் சேர்க்க, மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, குட்டி யானையை, யானை மடுவு பகுதியில், இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திரியும் வேறு தாயின் கூட்டத்தில் சேர்க்க திட்டமிட்டனர்.

இதற்காக அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்த குட்டியை, வனத்துறை வாகனத்தில் ஏற்றி யானை மடுவு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

விலகி செல்லும் தாய்!


வனத்துறையினர் கூறுகையில், 'தாய் யானை உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தபோது, குட்டிக்கான பால் கிடைக்கவில்லை. இதனால் குட்டி, தாயை விட்டு பிரிந்து சென்றது. தாய் யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால், தற்போது முழு உடல் நலத்துடன் உள்ளது.

இதனால், தாய் யானையின் நகர்வு வேகமும் அதிகரித்துள்ளது. தாயின் அருகில், குட்டியை அழைத்து செல்லும்போதெல்லாம், தாய் யானை, குட்டியின் அருகில் வராமல், வேகமாக அடர் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது.

இதனால், யானை மடுவு பகுதியில், வேறு யானைகள் கூட்டத்தில், குட்டியை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த கூட்டத்திலும் குட்டி யானையை சேர்க்காவிட்டால், குட்டியை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்படும்' என்றனர்.

விலகி செல்லும் தாய்!

வனத்துறையினர் கூறுகையில், 'தாய் யானை உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தபோது, குட்டிக் கான பால் கிடைக்கவில்லை. இதனால் குட்டி, தாயை விட்டு பிரிந்து சென்றது. தாய் யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால், தற்போது முழு உடல் நலத்துடன் உள்ளது. இதனால், தாய் யானையின் நகர்வு வேகமும் அதிகரித்துள்ளது. தாயின் அருகில், குட்டியை அழைத்து செல்லும்போதெல்லாம், தாய் யானை, குட்டியின் அருகில் வராமல், வேகமாக அடர் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இதனால், யானை மடுவு பகுதியில், வேறு யானைகள் கூட்டத்தில், குட்டியை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த கூட்டத்திலும் குட்டி யானையை சேர்க்காவிட்டால், குட்டியை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்படும்' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us