ADDED : ஜூலை 27, 2024 12:38 AM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன், 53. இவர் அரசு பள்ளி ஒன்றில் பாட்டு ஆசிரியராக பணிபுரிகிறார்.
பத்மநாபன் பணிபுரிந்து வரும் பள்ளியில், படித்து வந்த சில மாணவிகளுக்கு, பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நேற்று முன் தினம் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் ஆசிரியர் பத்மநாபன் மாணவிகளுக்கு, பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பத்மநாபனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ----