/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பில்லுார் அணை 3வது முறையாக நிரம்பியது பில்லுார் அணை 3வது முறையாக நிரம்பியது
பில்லுார் அணை 3வது முறையாக நிரம்பியது
பில்லுார் அணை 3வது முறையாக நிரம்பியது
பில்லுார் அணை 3வது முறையாக நிரம்பியது
ADDED : ஜூலை 27, 2024 12:39 AM

மேட்டுப்பாளையம்;பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பில்லூர் அணை மூன்றாவது முறையாக நேற்று மீண்டும் நிரம்பியது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 89 அடியாக இருந்தது.
நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால், நீர்மட்டம் கிடு கிடுவென உயர துவங்கி நேற்று காலை 11 மணியளவில் அணையின், நீர்மட்டம் 97 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து உள்ளதால், இது அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. பில்லுார் அணை மூன்றாவது முறையாக நேற்று நிரம்பி வந்தது. இதனால் பவானியாற்று கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள ஆபத்தான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள, 19 பாயிண்ட்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.