/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் குறைதீர் முகாமில் 50 மனுக்களுக்கு சுமூக தீர்வு மக்கள் குறைதீர் முகாமில் 50 மனுக்களுக்கு சுமூக தீர்வு
மக்கள் குறைதீர் முகாமில் 50 மனுக்களுக்கு சுமூக தீர்வு
மக்கள் குறைதீர் முகாமில் 50 மனுக்களுக்கு சுமூக தீர்வு
மக்கள் குறைதீர் முகாமில் 50 மனுக்களுக்கு சுமூக தீர்வு
ADDED : ஜூன் 06, 2024 06:48 AM

கோவை : கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், 50 மனுக்களுக்கு சுமூகமான முறையில், தீர்வு காணப்பட்டது.
பொது மக்கள் அளித்த மனுக்கள் மீதான விசாரணை மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்கள் மீது, மறுவிசாரணை செய்யும் மக்கள் குறைதீர் முகாம், கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று நடந்தது.
எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த இம்முகாமில் குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை என, 65க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், மூன்று மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டது.
மேலும், 50 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 15 மனுக்கள் மீது மேல் விசாரணை மேற்கொள்ளவும், பரிந்துரை செய்து தீர்வு காணப்பட்டது. பிற வேலை நாட்களில், அந்தந்த டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று பொது மக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என, எஸ்.பி., பத்ரிநாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.