Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதியவரிடம் ரூ.90 லட்சம் ஆன்லைன் வர்த்தக மோசடி

முதியவரிடம் ரூ.90 லட்சம் ஆன்லைன் வர்த்தக மோசடி

முதியவரிடம் ரூ.90 லட்சம் ஆன்லைன் வர்த்தக மோசடி

முதியவரிடம் ரூ.90 லட்சம் ஆன்லைன் வர்த்தக மோசடி

ADDED : ஜூலை 18, 2024 09:43 PM


Google News
கோவை:கோவை, கணபதி, கே.பி.ஆர்., நகரை சேர்ந்தவர் பட்டாபிராமன், 65. இவர் ஆதரவற்றோருக்கும், பழங்குடியின மக்களுக்கும் உதவிகள் வழங்கி சமூக சேவை செய்து வருகிறார். மேலும், ஆன்லைன் வர்த்தகம் செய்து அதில் கிடைக்கும் வருவாயை சமூக சேவை பணிக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்தார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்வது குறித்து தகவல் தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஆன்லைனில் மர்ம நபரிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் ஏப்., 13 முதல் ஜூன், 5ம் தேதி வரை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு, 14 தவணைகளில், 90 லட்சத்து, 4,471 ரூபாய் செலுத்தியுள்ளார்.

ஆனால், லாப தொகை வராத நிலையில், அந்த நபரிடம் ஆன்லைனில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கூடுதலாக முதலீடு செய்யுமாறு அந்நபர் வலியுறுத்தியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பட்டாபிராமன், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us