/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை கிடங்கு தீயை அணைக்க ரூ.76.70 லட்சம்! மாநகராட்சி மாமன்றத்தில் சமர்ப்பித்த 'கணக்கு' குப்பை கிடங்கு தீயை அணைக்க ரூ.76.70 லட்சம்! மாநகராட்சி மாமன்றத்தில் சமர்ப்பித்த 'கணக்கு'
குப்பை கிடங்கு தீயை அணைக்க ரூ.76.70 லட்சம்! மாநகராட்சி மாமன்றத்தில் சமர்ப்பித்த 'கணக்கு'
குப்பை கிடங்கு தீயை அணைக்க ரூ.76.70 லட்சம்! மாநகராட்சி மாமன்றத்தில் சமர்ப்பித்த 'கணக்கு'
குப்பை கிடங்கு தீயை அணைக்க ரூ.76.70 லட்சம்! மாநகராட்சி மாமன்றத்தில் சமர்ப்பித்த 'கணக்கு'
ADDED : ஜூலை 26, 2024 11:32 PM

கோவை:வெள்ளலுார் குப்பை கிடங்கில் ஏப்., மாதம் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு ரூ.76.70 லட்சம் செலவு செய்ததாக, கோவை மாநகராட்சியில் செலவு கணக்கு காட்டியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், டீ, காபி மற்றும் உணவு செலவு மட்டும் ரூ.27.51 லட்சம் ஆகும்.
கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, 99வது வார்டில் உள்ள வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கை. கடந்த ஏப்., 6 முதல், 17 வரை கட்டுக்கடங்காமல் தீ பரவியது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள், தீயணைப்பு அலுவலர்கள், போலீசார் முகாமிட்டு, தீயை அணைக்க முயற்சித்தனர். மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இவ்வகையில், 1,400 பேர் தினமும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தனியார் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. பெட்ரோல், டீசல், ஆயில் போன்றவை மாநகராட்சியால் செலவு செய்து, நிரப்பப்பட்டது. மாநகராட்சி பொது நிதியில் இருந்து, 76 லட்சத்து, 70 ஆயிரத்து, 318 ரூபாய் செலவு செய்திருப்பதாக, கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. இது, நேற்று நடந்த மாமன்ற கூட்ட பார்வைக்கும், பதிவுக்கும் வைக்கப்பட்டது.
அதேநேரம், வெள்ளலுார் குப்பை கிடங்கில் பரவிய தீயை அணைக்க, கமிஷனர் தலைமையில் செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனைத்து தரப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினருக்கு மாமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில், கிடங்கு வளாகத்தில், 'வாட்ச் டவர்' கட்டுவதற்கு ரூ.49.80 லட்சம் ஒதுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளித்ததாவது:
வெள்ளலுார் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, அனைத்து தரப்பினரும் பணிபுரிந்தனர். கவுன்சிலர்களும் உடனிருந்தனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்க தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
11 மோட்டார்கள் தருவிக்கப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சியளித்து, அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குப்பை கிடங்கிற்குள் வாகனங்கள் சென்று வரும் வகையில், ரோடு போடப்பட்டு உள்ளது. குப்பை பிரித்துக் கொட்டப்பட்டு இருக்கிறது. டிரோன் மூலமும், குப்பையின் வெப்பத்தை கண்டறியும், நவீன கருவி மூலமும் கண்காணிக்கிறோம்.
45 அடி உயரத்தில் இருந்து கிடங்கை பார்வையிடும் வகையில், 'வாட்ச் டவர்' அமைக்கப்படும். உக்கடம் கழிவு நீர் பண்ணையில் சுத்திகரித்த நீர் எடுத்து வர முடியும்.
இனி, குப்பையில் தீப்பிடிக்கும் பிரச்னை வராது; அவ்வாறு வந்தாலும் உடனடியாக அணைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.